Saturday 4th of May 2024 12:39:04 AM GMT

LANGUAGE - TAMIL
வாள்வெட்டு
யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வாள்வெட்டு: இருவர் காயம்!

யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வாள்வெட்டு: இருவர் காயம்!


யாழ்.பாண்டியன்தாழ்வு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு சந்தனமாத கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் (வயது - 27) என்ற இளைஞனே தலை மற்றும் கையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மற்றயவரான முச்சக்கர வண்டிச் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு இளைஞர்களையும் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாசையூரைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் ஒன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE